மதுரை: இயற்கை நமக்கு வழங்கிய வளங்களை அழித்தால், வருங்காலம் நம்மை மன்னிக்காது’’ என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், குவாரிகளில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு மணல் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, தமிழக அரசு பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், தேவதானபுரத்தை சேர்ந்த பென்சிங், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கன்னியாகுமரி அருகே வேளிமலை, குளவிமலையில் செயல்படும் சட்டவிரோத குவாரிக்கு தடைவிதிக்க கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் நேற்று விசாரித்து, ``தமிழக அரசுக்கு கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு ஆற்று மணல் மற்றும் எம்.சாண்ட் தேவைப்பட்டது? 5 ஆண்டுகளில் மணல் குவாரிகளில் எவ்வளவு மணல் எடுக்கப்பட்டுள்ளது? 5 ஆண்டுகளில் எம்.சாண்ட் எவ்வளவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது? பக்கத்து மாநிலங்களுக்கு மணல், எம்.சாண்ட் கடத்தப்படுகிறதா?