காஞ்சிபுரம் அருகே ஓடும் காரில் தீ

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் தேநீர் மற்றும் பிஸ்கெட் வியாபாரம் செய்து வருபவர் சிங்காரவேல். இவர், நேற்று தனது காரில் அட்டை பெட்டிகளை ஏற்றி கொண்டு செவிலிமேடு-கீழம்பி சாலை வழியாக சென்றார். வெங்கடாபுரம் அருகே வந்தபோது, காரின் பின்பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சிங்காரவேல், உடனடியாக காரை நிறுத்தி விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். தகவலறிந்து காஞ்சிபுரம் தீயணைப்பு படை வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் கார் முழுவதும் எரிந்து சேதமானது. புகாரின்பேரில், காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post காஞ்சிபுரம் அருகே ஓடும் காரில் தீ appeared first on Dinakaran.

Related Stories: