கேரளாவில் அதிரடிப்படையினரால் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

கேரளா: வயநாடு அருகே வைத்திரி பகுதியில் உள்ள ரிசார்ட்டில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு மாவாயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ரிசார்ட்டுக்குள் நேற்றிரவு புகுந்த மாவோயிஸ்டுகள் அங்கிருந்தவர்களை சிறைபிடித்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். தகவல் அறிந்து ரிசார்ட் சென்ற கேரள அதிரடிப்படை மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச்சண்டை நடத்தியது. துப்பாக்கிச்சண்டையில் காயமடைந்த 2 மாவோயிஸ்டுகள் ரிசார்ட்டில் இருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: