`மோடி சிறந்த உந்துசக்தியாம்’ ரவீந்திர ஜடேஜா மனைவி பா.ஜனதாவில் ஐக்கியம்

காந்தி நகர்: இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு ரிவாபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நித்யானா என்ற மகள் இருக்கிறாள். கடந்த ஆண்டு இவரது காரில் மோதிய போலீஸ்காரர் ஒருவரை அடித்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.இந்த நிலையில் காா்னி சேனா என்ற அமைப்பின் மகளிரணி தலைவியாக ரிவாபா நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ரிவாவா கணவர் ரவீந்திரஜடேஜாவுடன் சமீபத்தில் பிரதமா் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் ஜாம் நகா் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் நிகழ்ச்சி நடைபெற்றது. குஜராத் விவசாயத்துறை அமைச்சர் பால்டு மற்றும் எம்பி பூணம் மாடம் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அப்போது, இவர்களது முன்னிலையில் ரிவாபா பா.ஜ.கவில் ஐக்கியமானார்.இதுகுறித்து ரிவாபா கூறுகையில், “பிரதமர் மோடிதான் எனக்கு மிகச்சிறந்த உந்துசக்தி. அதனால்தான் பாஜகவில் இணைந்தேன். என்னால் தனியாக எந்த மக்கள் சேவைகளையும் செய்ய முடியாது என்பதால், பாஜகவில் சேர்ந்துள்ளேன். என் முதல் இலக்கு பெண்களுக்கு அதிகாரம் பெற்று தர வேண்டும் என்பதுதான்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: