புழல்: செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் உள்ள நடைபாதை கடைகளில் நேற்று முன்தினம் மாலை போலீஸ் உடையில் இருந்த ஒருவர், திடீர் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை பயன்படுத்தியதை கண்டுபிடித்தார். பின்னர், சம்மந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு வசூலில் ஈடுபட்டார். தொடர்ந்து, அருகில் உள்ள திரையரங்கில் பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதாக மிரட்டி மாமூல் கேட்டுள்ளார். அப்போது, அந்த நபர் மீது திரையரங்க ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், இதுபற்றி செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.