சென்னை: கிருஷ்ணகிரி நகை வியாபாரியிடம், துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்ற 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் மணிகண்டன் (45). நகை வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் சிவக்குமார், முகமது ரியாஸ். நகை வியாபாரி மணிகண்டனிடம், மேற்கண்ட 2 பேரும், காஞ்சிபுரம் அருகே அடகு வைத்து, மீட்கப்பட்ட 2 கிலோ தங்க நகைகள் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் இருப்பதாகவும், அதனை ஒரு கிராம் 2 ஆயிரத்துக்கு தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.அதை நம்பிய மணிகண்டன், 20 லட்சத்தை எடுத்துக் கொண்டு, கடந்த 2 நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் வந்தார். காஞ்சிபுரத்தில் சரவணவேல் (எ) சிங்காரவேல் என்பவர், அவர்களுடன் சேர்ந்தார். மாலை பாலுசெட்டிசத்திரம் பகுதிக்கு அழைத்து சென்ற அவர்கள், கீழம்பி பைபாஸ் சாலை அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி, மணிகண்டனிடம் இருந்த 20 லட்சத்தை பறித்து சென்றனர்.=