இந்தியா சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல் Feb 21, 2019 நீதிபதி உச்ச நீதிமன்றம் புதுடெல்லி: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் மேற்கு வங்க அதிகாரிகளுக்கு எதிரான சிபிஐ.யை மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி தொடர்பான வழக்கு கடந்த 2013ம் ஆண்டு சிபிஐ.க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தொடர்ந்து வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக மேற்கு வங்க தலைமை செயலாளர் மலய் குமார், டிஜிபி வீரேந்திர குமார், கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோர் மீது உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ குற்றஞ்சாட்டியது. கடந்த 5ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு , சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், குற்றச்சாட்டு தொடர்பாக பதில் தாக்கல் செய்யும்படியும் சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தலைமை செயலளார் மலய் குமார், டிஜிபி வீரேந்திரகுமார், போலீஸ் ஆணையர் ராஜீவ்குமார் ஆகியோர் கடந்த 18ம் தேதி தனித்தனியாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் நாகேஷ்வர ராவ், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நாகேஸ்வரராவ், சாரதா நிதி மோசடி வழக்கு விசாரணைக்கு மாநில அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக தொடரப்பட்ட மனு தொடர் பான விசாரணை அமர்வில் இருந்து தான் விலகுவதாக தெரிவித்தார். வழக்கில் மேற்கு வங்க அரசு சார்பாக வழக்கறிஞராக ஆஜராக உள்ளதால் இந்த வழக்கு விசாரணை அமர்வில் பங்கேற்க இயலாது என்று அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அமர்வில் இடம்பெற்ற ஒரு நீதிபதி வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதால் வழக்கு வருகிற 27ம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை வாக்களிக்க முடியாமல் தடுக்கும் பா.ஜ.க.வின் சதி அம்பலம்: காங்கிரஸ் சாடல்
பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால் இந்தியாவில் சேவையை நிறுத்த வேண்டியிருக்கும்: வாட்ஸ்ஆப் நிறுவனம் எச்சரிக்கை!!
சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய விவகாரம் : தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் என்னென்ன?
ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய விவகாரம் : வேட்பாளர்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய வாய்ப்புகள் என்னென்ன?
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பாராமுல்லாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
ஒப்புகைச்சீட்டை வாக்காளர்கள் எடுத்து பெட்டியில் போட அனுமதிக்க முடியாது, வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்!!
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!!
மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு!: குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்..!!
End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் நாட்டை விட்டு வெளியேற நேரிடும் : வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை
நான் நம்பும் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளேன்.. மாற்றம் கண்டிப்பா இருக்கு: நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி..!!