வங்கதேச பிரதமர் ஹசினா அறிவிப்பு இளைஞர்களுக்கு வழி விட ஓய்வு பெற விரும்புகிறேன்

தாகா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா (71). கடந்த டிசம்பரில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட இவர், வெற்றி பெற்று நான்காவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில்,  அவர் ஓய்வு  பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது பற்றி ஹசீனா அளித்துள்ள பேட்டியில், “நான் இதற்கு முன் மூன்று முறை பிரதமராக இருந்துள்ளேன். தற்போது நான்காவது முறையாக பிரதமர் பதவியை வகித்து வருகிறேன். மீண்டும் பிரதமர் பதவியை பிடிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அனைவரும் ஒரு கால கட்டத்தில் ஓய்வு பெறவேண்டும். அப்போது தான் இளைய தலைமுறையினருக்கு வழிவிட முடியும். எனவே, தற்போதுள்ள எனது பதவிக்காலம் முடிந்த பின் ஓய்வெடுக்க விரும்புகிறேன். கோபல்கஜ்சில் உள்ள எனது சொந்த கிராமமான துங்கிபாராவில் எனது ஓய்வு நாட்களை கழிக்க ஆசைப்படுகிறேன்” என்றார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: