வந்தவாசி: சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நில அளவீடு செய்யப்பட்டது. விவசாயிகள் கடும் எதிர்ப்பு, நீதிமன்ற தடையால் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே எடுக்க இருந்த நிலத்தின் அருகாமையில் கூடுதலாக நிலம் எடுப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நேற்று வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் நடத்தப்போவதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் கலந்துகொள்ள வந்த விவசாயிகளை போலீசார் சோதனை செய்தனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாதிகளை போல் விவசாயிகளை போலீசாரும், வருவாய் துறையினரும் நடத்துகின்றனர் என்று கோஷங்கள் எழுப்பி அலுவலகம் செல்லாமல் மெயின் கேட் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.