உடுமலை: கோவையில் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனத்தில் விடுவிக்கப்பட்ட சின்னதம்பி யானை, அங்கிருந்து வெளியேறி உடுமலை கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த 8 நாட்களாக முகாமிட்டுள்ளது.உடுமலை சுற்றுவட்டார பகுதியில் நெல், கரும்பு தோட்டங்களுக்குள் இந்த யானை உலா வருகிறது. இதை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பகுதிக்கு சென்ற சின்னதம்பி, ஆற்றை கடக்க முயன்றது. வனத்துறையினர் விரட்டியதால், மீண்டும் கிருஷ்ணாபுரம் பகுதிக்கு வந்து நின்றது.