சென்னை: கால்டாக்சி டிரைவர் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேன் டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கால்டாக்சி டிரைவர் ராஜேஷ். இவர், போலீசாரின் டார்ச்சர் தாங்க முடியாமல் கடந்த சில தினங்களுக்கு முன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான வாக்குமூல வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, கால்டாக்சி டிரைவர் தற்கொலைக்கு காரணமான போலீசாரை கண்டித்து 100க்கும் மேற்பட்ட கால்டாக்சி மற்றும் டெம்போ வேன் டிரைவர்கள் துரைப்பாக்கம் 200 அடி சாலையில் நேற்று காலை திரண்டனர். பின்னர், திடீரென வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.