மதுரை: கோயில் நிலங்களை மீட்க கோரிய வழக்கில் 4 மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் சமஸ்தானத்தின் கீழ் திருவாடானையில் உள்ள ஆதிரெத்னேஸ்வரர் கோயிலுக்கும், சமஸ்தானத்திற்கும் சொந்தமான நிலங்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், இலங்கையிலும் உள்ளன. இந்த சொத்துக்கள் பலரது ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் உரிய வருமானமின்றி கோயில் திருப்பணிகள் பாதிக்கிறது. எனவே, சமஸ்தானத்திற்கு சொந்தமான கோயில் நிலங்களை மீட்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.