மதுரை: ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்பட்டது என்பதற்காக அதிமுக மீது வீண்பழி சுமத்தப்படுகிறது என மதுரையில் பொதுமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசினார். நாடாளுமன்ற தேர்தலுடன் திருப்பரங்குன்றத்துக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் திருப்பரங்குன்றம் தேர்தலில் அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என பழனிசாமி கேட்டுக்கொண்டார்.