அதிமுக அரசு மக்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ளாமல் அரசு வருவாயில் கவனம் செலுத்துகிறது: கனிமொழி

சென்னை: அதிமுக அரசு மக்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ளாமல் அரசு வருவாயில் கவனம் செலுத்துகிறது என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது என கூறியுள்ளார். மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துவதை விமர்சிக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடுவது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் எந்த முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவேன் என அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: