புதுடெல்லி: மேற்குவங்க முதல்வர் மம்தாவின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு தருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நாளை எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தும் நிலையில் ராகுல் காந்தி, மம்தாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் பல லட்சக்கணக்கான இந்தியர்கள் மோடி அரசுக்கு எதிராக திரளுகின்றனர் என்றும், ஜனநாயகம், மதச்சார்பின்மையை அழிக்க நினைக்கும் மோடிக்கு பாடம் புகட்டுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.