வாஷிங்க்டன் : அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் திடீர் அறிவிப்பு எதிரொலியாக எந்த நேரத்திலும் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஊடுருவலை கட்டுப்படுத்த தடுப்புச்சுவர் கட்டவேண்டும் என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்திவரும் மெக்சிகோ எல்லைக்கு சென்று பாதுகாப்பு படையினருடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; எல்லை சுவர் கட்ட 40,000 கோடி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்றம் முன்வராவிட்டால் அதிகாரத்தை பயன்படுத்தி அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் என்று திட்டவட்டமாக கூறினார்.