அரசு மருத்துவர்களின் பரிந்துரைபடி நடவடிக்கை எடுக்க எவ்வளவு காலமாகும்?: மதுரை ஐகோர்ட் கேள்வி

மதுரை: அரசு மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பான பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க எவ்வளவு காலமாகும்?  என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறை செயலாளர் தரப்பில் மருத்துவர்களின் கோரிக்கை பற்றிய பரிந்துரை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து முகமது யூனிஸ்ராஜா தொடுத்த வழக்கை ஜனவரி 10ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: