வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பள்ளம் தோண்டியபோது உலோகத்தாலான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா மணக்காடு மேற்கு பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியை சுகந்தம் என்பவரின் வீட்டிற்கு அருகே மின்கம்பம் நட பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அந்த பள்ளத்திலிருந்து உலோகத்தாலான பாணையில் சுமார் அரை அடி உயரமும் சுமார் அரைகிலோ எடையுள்ள உலோகச்சிலை கண்டெடுக்கப்பட்டது.