புதுச்சேரி: வாய்மொழி உத்தரவுகளை ஏற்று காவல்துறை செயல்படக்கூடாது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவுரை வழங்கியுள்ளார். ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் என யார் வாய்மொழி உத்தரவிட்டாலும் செயல்படுத்த தேவையில்லை என அவர் கூறியுள்ளார். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்க ஆளுநர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.