பேரையூர்: பேரையூர் பகுதிகளில் வருடத்திற்கு ஒருமுறை விளையும் அபூர்வ மருத்துவ குணம் கொண்ட சிறுவத்து காளான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் வடகிழக்கு பருவமழை மற்றும் கஜா புயலால் மழை பெய்தது. இந்த மழையால் மானாவரி நிலங்களில் கீரை வகைகள், காளான் போன்றவைகள் முளைத்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த அபூர்வ காளான் முளைத்துள்ளன. இதனை சேகரித்து மக்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து மல்லப்புரம் அய்யம்பட்டியை சேர்ந்த சுந்தரம் கூறுகையில், ‘மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் மிகவும் அரிதாக கிடைக்கும் சிறுவத்து காளான் முளைத்துள்ளது. ஈசல் புற்றிலிருந்து முளைக்கக்கூடிய இந்த காளான் புதரில் கொத்தாகவும், மற்ற இடங்களில் ஒன்றிரண்டாகவும் கிடைக்கும். மற்ற சாதரண காளான்களை விட இரண்டு மடங்கு நன்மை தரக்கூடியது. வருடத்திற்கு ஒரு மட்டுமே கிடைக்கும்.