இதுதொடர்பான செய்தி வெளியானதால் தனது நற்பெயரும், நன்மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கக் கோரி மகேசுக்கு எதிராக டி.ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஜெயக்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் சுப்ரமணியம் ஆஜராகி, வழக்கில் மகேஷ் 583 நாட்களுக்கும் மேலாக எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததால் அபராதமாக 5 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்துமாறு மகேசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்: அவதூறு வழக்கில் பதில் தராததால் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.