நாடு முழுவதும் கழிவறைகள் கட்டுமான பணி வேகம் அதிகரிப்பு: பிரதமர் பெருமிதம்

புதுடெல்லி: நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் கழிவறை கட்டுமான பணிகளின் வேகம் அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.  உலக கழிவறை தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று உலக கழிவறை தினம். நாடு முழுவதும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான நமது பொறுப்பை மீண்டும் உறுதிபடுத்துவோம்.

கடந்த நான்கு ஆண்டுகளில் கழிவறை கட்டுமான பணிகள், துப்புரவு பாதுகாப்பு குறிப்பிட்ட வேகத்தில் அதிகரித்துள்ளதை கண்டு பெருமை கொள்வோம். 130 கோடி இந்தியர்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் இந்த இயக்கத்துக்கு தலைமையேற்றனர். தூய்மை இந்தியாவின் கனவை நினைவாக்குவதற்காக பணியாற்றிவர்களுக்கு எனது பாராட்டுக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: