சென்னை: கஜா புயலை 100 % பாதுகாப்பாக எதிர்கொண்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மழையும் காற்றும் நின்ற பிறகுதான் மீட்புப்பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார். சவாலான பணியை சிறப்பான முறையில் எதிர்கொண்டுள்ளோம். பாதுகாப்பு நலன் கருதியே மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.