வீட்டை உடைத்து நகை திருட்டு

 

பல்லாவரம் மே 8: பல்லாவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
பல்லாவரம் அடுத்த பம்மல், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் செந்தில் (30). தனது மனைவி விமலா தேவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் தனது மனைவியுடன் வேலை பார்ப்பதற்காக சென்னை சென்றிருந்தார். மீண்டும் இரவு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த இரண்டரை சவரன் நகைகள், இரு ஜோடி வெள்ளி கொலுசுகள், 2 குத்து விளக்குகள் ஆகியவை திருடுபோய் இருந்தது.
இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார், விசாரித்து வருகின்றனர்.

Related Stories: