ஆபரேஷன் கருடா குறித்து தகவல் தெரிவித்ததால் தொடர்ந்து கொலை மிரட்டல் பாதுகாப்பு கோரி நடிகர் கடிதம்

திருமலை: ‘‘ஆபரேஷன் கருடா குறித்து தகவல் தெரிவித்ததால், தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என ஆந்திர டிஜிபிக்கு நடிகர் சிவாஜி கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு திரைப்பட நடிகர் சிவாஜி. மத்திய அரசு ‘ஆபரேஷன் கருடா’ என்ற பெயரில் ஆந்திர மாநில அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாக திட்டம் வகுத்து இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் உயிருக்கு ஆபத்து இல்லாத வகையில் தாக்குதல் நடத்தக்கூடும், சிபிஐ,  பொருளாதார குற்றப்பிரிவு மூலமாக மாநில அரசுக்கும்  அவர்களை சார்ந்தவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாக சமீபத்தில் சிவாஜி தெரிவித்திருந்தார்.

அதன்படி ஆந்திராவில் தெலுங்குதேச கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனையும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல் சம்பவமும் நடைபெற்றுள்ளது. ஆபரேஷன் கருடா குறித்து முன்கூட்டியே  நடிகர் சிவாஜி எப்படி தெரிந்து கொண்டார் என்பது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் குடும்பத்தினருடன், அமெரிக்காவில் சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவாஜி ஆந்திர மாநில டிஜிபி ஆர்.பி.தாகூர், உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பாவிற்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘ஆபரேஷன் கருடா குறித்து தகவல் தெரிவித்ததால் தன்னுடைய உயிருக்கும், தனது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது. மேலும், அமெரிக்காவிலிருந்து வருகிற 21ம் தேதி ஐதராபாத் விமான நிலையம் வர உள்ளேன். எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: