டெல்லி: ரஃபேல் போர்விமானம் குறித்து உச்சநீதிமன்றம் விசாரிக்க தலைமை அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விமானப்படை வீரர் தான் ரஃபேல் போர்விமானம் குறித்து விவாதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் ரஃபேல் வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் வாதித்துள்ளார். ரஃபேல் தொடர்பான அனைத்து விவரங்களையும் நாடளுமன்றத்தில் தெரிவிக்க முடியாது என்றும் கூறினார். மேலும் தகவல் அறியும் சட்டம் ரஃபேல் கொள்முதலுக்கு செல்லாது எனவும் வாதிட்டார்.