மும்பை: கிரிமினல்களை கட்சியில் சேர்ப்பதாக குற்றம்சாட்டி, மகாராஷ்டிரா பாஜ எம்.எல்.ஏ. அனில் கோதே நேற்று திடீரென ராஜினாமா செய்தார். மேலும் கட்சியில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார். மகாராஷ்டிராவின் துலே சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ அனில் கோதே அடுத்த வாரம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க விருப்பதாக தெரிவித்தார். தேசியவாத காங்கிரசில் இருந்து சில தலைவர்களை பாஜ.வில் சேர்ப்பதற்கு அனில் கோதே எதிர்ப்பு தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.