சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவன் குறித்து பேசுவதற்கு திருநாவுக்கரசருக்கு என்ன அருகதை இருக்கிறது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் சண்முகம், ரங்கபாஷ்யம், சிவராமன், ஜெரோம் ஆரோக்கியராஜ், குலாம் மொகைதீன், வசந்த ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: காங்கிரஸ் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனையும் மிகுந்த மனவேதனை அடையச் செய்துள்ளது.
சமூக நீதிக்காக புரட்சி செய்த தந்தை பெரியாரையும், சொல்லின் செல்வர் ஈவிகேஎஸ் சம்பத் குறித்தும் பேசுவதற்கு திருநாவுக்கரசருக்கு என்ன அருகதை இருக்கிறது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கொள்கை பிடிப்போடு வெவ்வேறு கட்சிகளில் இருப்பது தவறில்லை.