குலசேகரம் : குலசேகரம் மணலிவிளையை சேர்ந்தவர் ரெஜி (41). இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஷைனி (31). தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். திக்குறிச்சி பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண், ரெஜியின் ஆட்டோவை அடிக்கடி வாடகைக்கு அழைப்பது வழக்கம். இதனால் அவர்களுக்கிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க ரெஜியின் கள்ளக்காதலிக்கு ஒரு போலீஸ்காரனுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உதவியுடன் ஹோம் கார்ட்டில் சேர்ந்தார் அந்த பெண். அதன் பிறகு ரெஜியிடம் பணம் கறப்பதிலேயே குறியாக இருந்தார். போதாத குறைக்கு மனைவியை அடித்து பிடித்து வாங்கிய பணத்தையும் ஆசை நாயகிக்கு அள்ளிக் கொடுத்து மகிழ்ந்தார். ஒரு கட்டத்தில் மனைவியின் தையல் மிஷினையும் விற்று பணம் கொடுத்தார். அப்போதுதான் திக்குறிச்சியில் கணவருக்கு கள்ளக்காதலி இருப்பது ஷைனிக்கு தெரியவந்தது. இதனால் ஷைனி 2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் சென்று விட்டார். இதன்பின்னர் நாகர்கோவிலில் வீடு எடுத்து கள்ளக்காதலர்கள் தங்கினர். இதன்பிறகு கள்ளக்காதலியின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாததால் அவர்கள் இடையே பிரச்னை வெடித்து. இந்த நிலையில் ரெஜியின் கள்ளக்காதலிக்கு வேறு பலருடன் தொடர்பு ஏற்பட்டது. அவரை கைவிட்டார். இதனால் ரெஜி வருமானம் இல்லாமல் அவதிப்பட்டார். வாடகை வாகனங்களை ஒட்டி வந்தார்.