நாங்குநேரி: நெல்லை அருகே பைக், லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் அரசு பெண் ஊழியர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி இறந்தனர். நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அடுத்த கருப்புக்கட்டியை சேர்ந்தவர் ஈசாக் (70). ஆடு வியாபாரி. நேற்று காலை இவர், வள்ளியூர் சந்தையில் ஆடுகளை வாங்கி மொபட்டில் ஏற்றிக் கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். மூன்றடைப்பில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஈசாக், சம்பவ இடத்திலேயே இறந்தார். தொடர்ந்து தறிகெட்டு ஓடிய கார், சென்டர் மீடியனை கடந்து எதிரே வாழைக்காய் லோடுடன் சென்ற லாரி மீது மோதியது. இதில் நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது. காரின் முன்பகுதி சுக்குநூறானது.