கீழ்ப்பாக்கம்: சென்னை முழுவதும், ‘ஜேப்படி திருடர்கள் ஜாக்கிரதை’ எச்சரிக்கையுடன் பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்ட, மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சென்னை தி.நகர், புரசைவாக்கம் உள்பட பல்வேறு முக்கிய பகுதிகளில் செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளை சம்பவங்களை தடுக்க கேமராக்களை பொருத்துமாறு, மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து தி.நகர், புரசைவாக்கம், பிராட்வே உள்பட பல்வேறு வணிக பகுதிகளில் கடந்த வாரம் கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணிகளில் சிறப்பு அதிரடி படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.இவற்றின் ஒரு பகுதியாக மாநகர பேருந்துகளில் பிக்பாக்கெட் சம்பவங்களை தடுக்கும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ‘‘ஜேப்படி திருடர்கள் ஜாக்கிரதை’’, சென்னை நகர காவல்துறை எனும் ஸ்டிக்கர்களை ஒட்டுமாறு, நேற்று முன்தினம் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்தார்.