சென்னை: சபரிமலை விவகாரத்தில் பாஜக வாக்கு அரசியல் செய்கிறது என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலின சமத்துவம் முக்கியமானது என்பதால் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று தீர்ப்பு வந்த நிலையில், அறவழிப் போராட்டம் எனக் கூறி சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்ச்சியில் பாஜக ஈடுபடுகிறது என அவர் கூறினார்.