சென்னை: இந்து அரசியலை பாஜக அரசு நடத்துவதாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். சென்னையில் முற்போக்கு எழுத்தாளர் மாநாட்டில் பேசிய அவர், முத்தலாக், சபரிமலை பிரச்சனையில் ஆர்.எஸ்.எஸ் மாறுபட்ட நிலையை எடுக்கிறது என்றும், வட இந்திய இந்துக்களின் பழக்கங்ள் மட்டுமே உயர்வு என்று ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.