துபாய்: இலங்கை அணி முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா மீது ஐசிசி ஊழல் தடுப்புக் குழு வழக்கு பதிந்துள்ளது.இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் நிர்வாகம் மீது சூதாட்டம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழல் தடுப்புக் குழுவினர் (ஏசியு) கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக் குழு தலைவருமான சனத் ஜெயசூரியா, இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.