சொல்லிட்டாங்க...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: விவசாயிகள் நலன் கருதி ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றிட போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: அரசு பள்ளிகளில் அதிகரித்து வரும் மாணவர் இடைநிற்றலை தடுக்க புதிய உத்திகளை வகுக்க கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்: ரத்த பரிசோதனை மையம் தொடர்பான புதிய அரசாணை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவி  செய்வது போல் உள்ளது. மத்திய மோடி அரசைப்போல், தமிழகத்தில் எடப்பாடி அரசும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்: நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உள்ள நிலையில், தமிழக முதல்வர் பதவி விலகி தான் குற்றமற்றவர் என்பதை மக்களுக்கு நிரூபிக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: