ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு சாயலில் இருக்கும் ஓட்டல் சர்வர் குறித்து தகவல் தந்தவருக்கு ரூ.1 லட்சம் பரிசு: இயக்குனர் ராம்கோபால் வர்மா அளிக்கிறார்

திருமலை: ஆந்திர முதல்வர் சாயலில் இருக்கும் ஓட்டல் சர்வர் குறித்து தகவல் தெரிவித்தவருக்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவ் இறுதி வாழ்க்கையில், லட்சுமி பார்வதியை திருமணம் செய்த பிறகு அவர் கண்ட எதிரிகள்,  அவர் பட்ட சிரமங்களை உலகறிய செய்யும் விதமாக ‘லட்சுமி என்டிஆர்’ என்ற படத்தை தயாரிப்பதாக அறிவித்து இருந்தார் ராம்கோபால் வர்மா. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சாயலில் இருக்கும் ஒருவர் ஓட்டலில் சர்வர் வேலை செய்யும் ஆறு நொடிகள் கொண்ட வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.

இந்த காட்சிகளை பார்த்த ராம்கோபால் வர்மா, தனது லட்சுமி என்டிஆர்  படத்தில் சந்திரபாபு நாயுடுவின் கதாபாத்திரத்திற்கு வீடியோவில் உள்ள அந்த நபரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். அந்த நபர் குறித்த தகவல் சொல்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு  வழங்கப்படும் என டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இதை பார்த்த ரோகித் என்பவர்  சந்திரபாபு நாயுடு போன்று இருப்பவரை பற்றி தகவல் அளித்ததால் அவருக்கு பரிசு வழங்குவதாக ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: