சென்னை: தமிழகத்தில் ஸ்மார்ட் வகுப்புகள் வராததற்கு 25 சதவீதம் கமிஷன் கேட்கப்படுவதே காரணம் என்று அதிமுக அரசு மீது நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்காக ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் கடந்த 2011-12ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 7 ஆண்டுகளாகியும் தமிழக அரசு பள்ளிகளில் இத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. மத்திய அரசு இத்திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்திற்காக இதுவரை மொத்தம் 5 முறை ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. இத்திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 25 சதவீதம் கையூட்டாக தர வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் கேட்டதாக கூறப்படுகிறது.