கல்வி அதிகாரியை தள்ளி விட்ட எம்எல்ஏ: வைரல் வீடியோவால் பரபரப்பு

பல்லியா:  உத்தரப் பிரதேசத்தில் பாஜ எம்எல்ஏ சுரேந்திர சிங் மாவட்ட பள்ளி ஆய்வாளரிடம் தவறாக நடந்து கொண்ட வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்லியா நகரில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜ எம்எல்ஏ சுரேந்திர சிங் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மாவட்ட பள்ளி ஆய்வாளர் நரேந்திர தேவ் பாண்டே, எம்எல்ஏ மட்டுமல்ல யாருக்கும் நான் பயப்படமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  எம்எல்ஏ, பள்ளி ஆய்வாளரை தள்ளிவிட்டதாக தெரிகிறது. பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சமாதானம் செய்து சூழலை கட்டுப்படுத்தி உள்ளார்.

பின்னர் இந்த சம்பவத்திற்காக எம்எல்ஏ சுரேந்திர சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: