முதல்வர் தொகுதியில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி போட்டி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானை சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் சவுத்ரி. இவரது மனைவி முகுல் சவுத்ரி. இவர் சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். நிருபர்களிடம் முகுல் சவுத்ரி கூறியதாவது: எனது பிறந்த இடமான ஜால்ராபதன் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளேன். முதல்வரின் சொந்த தொகுதியில் உள்ள மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அங்கு எந்த மேம்பாட்டு பணிகளும்  மேற்கொள்ளப்படவில்லை. முதல்வரின் ஆட்சியின் கீழ் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 1993ம் ஆண்டு பைரோன் சிங் ஷெகாவத் முதல்வராக இருந்தபோது முகுல் சவுத்ரியின் தாயார் ஷாஷி தத்தா சட்ட அமைச்சராக இருந்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: