புதுடெல்லி: அமெரிக்காவின் ஜிபிஎஸ் மற்றும் ரஷ்யாவின் குளோனாஸ் நேவிகேஷன் செயற்கைக்கோள்களுக்கு பதிலாக, இஸ்ரோவின் ஐஆர்என்எஸ்எஸ் நேவிகேஷன் செயற்கைக்கோள்கள் மூலம் இயங்கும் வழிகாட்டி கருவிகள் விரைவில் இந்திய கார்களில் பொருத்தப்படவுள்ளன. இந்தியாவில் ஓடும் டாக்சிகள் பெரும்பாலானவை ஜிபிஎஸ் வழிகாட்டுதலின் மூலம் இயக்கப்படுகின்றன. அமெரிக்காவின் ஜிபிஎஸ் மற்றும் ரஷ்யாவின் குளோனாஸ் நேவிகேஷன் செயற்கைக்கோள்கள் எல்.1 அலைவரிசையை பன்படுத்துகின்றன. தற்போது இஸ்ரோ ஐஆர்என்எஸ்எஸ் நேவிகேஷன் செயற்கைக்கோள்கள்களை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது. மொத்தம் 11 செயற்கைக்கோள்கள் இந்த தொகுப்பில் உள்ளன. இதற்கு ‘நேவிக்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.