நடிகை பலாத்கார வழக்கில் திலீப் மீது நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கத்திற்கு நடிகைகள் மீண்டும் கடிதம்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை, கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மலையாள நடிகர் சங்க பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் மீண்டும் நடிகர் சங்ககத்தில் சேர்க்கப்பட்டார். நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் சினிமா கவிஞர்கள் சங்கத்தை சேர்ந்த ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆகியோர் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் நடிகைகள் நேற்று முன்தினம் மலையாள நடிகர் சங்கத்துக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி எங்களது கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உறுதி அளிக்கப்பட்டபடி ஒரு வாரத்துக்குள் திலீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: