விற்பனை பத்திரம் வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம்: அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை

சென்னை: அண்ணாநகர் கிழக்கு அன்னை சத்யா நகரில் புருஷோத்தமன் என்பவருக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது. வீட்டுக்கான தவணை தொகையை செலுத்திய நிலையில், விற்பனை பத்திரத்தை வழங்கும்படி டி.பி.சத்திரத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் 5வது எஸ்டேட் அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வந்த பி.எஸ்.ரவியிடம், கடந்த 2009ம் ஆண்டு புருஷோத்தமன் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு ரவி, ₹6 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் விற்பனை பத்திரத்தை தர முடியும், என்று கூறி உள்ளார். இதுகுறித்து புருஷோத்தமன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பின்னர், போலீசார் அறிவுரைப்படி புருஷோத்தமன் லஞ்ச பணத்தை ரவியிடம் கொடுத்தபோது, மாறு வேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், குடிசை மாற்று வாரிய அதிகாரி பி.எஸ்.ரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்….

The post விற்பனை பத்திரம் வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம்: அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: