பெர்லின் : வோல்க்ஸ்வோகன் கார்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக புகையை வெளியிட்டதாக எழுந்த புகாரில் ஆடி நிறுவன சிஇஓ ரூபர்ட் ஸ்டாட்லர் கைது செய்யப்பட்டார்.ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வோல்க்ஸ்வோகன் நிறுவனம் தயாரித்த டீசல் கார்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றியதாக அமெரிக்காவில் நடந்த புகை மாசு சோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, முன்னாள் சிஇஓ மார்டின் வின்டர்கோர்ன் உள்ளிட்ட 9 மானேஜர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவர் சிறையில் உள்ளநிலையில், வின்டர்கோர்ன் உள்ளிட்டோர் ஜெர்மனியில் உள்ளனர்.