திருப்பதியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கோபூஜை

திருமலை: திருப்பதியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கோபூஜை செய்தார். திருப்பதி அலிபிரியில் சப்த கோ பிரதட்சண மந்திரத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று தரிசனம் செய்தார். முன்னதாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சென்னை ஆலோசனை குழு தலைவர் சேகர் கவர்னரை வரவேற்றார். பின்னர், பசு மாட்டின் எடைக்கு ஏற்ப ரூ.6,600 தீவனத்திற்கான தொகையை கவர்னர் வழங்கி பசு பூஜை செய்து, பசுவுக்கு தீவனங்கள் வழங்கினார். இதில், தேவஸ்தான கோசாலை இயக்குநர் ஹரிநாத் உடனிருந்தார். அதனை தொடர்ந்து திருமலைக்கு சென்ற கவர்னர் அங்கேயே இரவு தங்கினார். தொடர்ந்து இன்று காலை ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்….

The post திருப்பதியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கோபூஜை appeared first on Dinakaran.

Related Stories: