வாழப்பாடி அருகே மழை காரணமாக: வீடு இடிந்து சிறுவன் பலி

வாழப்பாடி: சேலம் மாவட்டம் கருமந்துறை மேல்நாடு மலைகிராமத்திற்கு உட்பட்ட பெரண்டூர் குக்கிராமத்தை சேர்ந்தவர் குண்டுமணி (35). இவரது மனைவி ராமாயி (32). இவர்களுக்கு கௌசிக் (3) என்ற குழந்தை உள்ளது. கடந்த 12ம் தேதி காலை 9 மணிக்கு, தனது ஓட்டு வீட்டில் ராமாயி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீடு இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளுக்குள் ராமாயி, குழந்தை கௌசிக் சிக்கினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, படுகாயத்துடன் உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வீட்டு சுவர் பொதும்பி அடியோடு வீடு இடிந்து விழுந்திருப்பது தெரியவந்தது.இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 3 வயது குழந்தை கௌசிக், இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தது. ராமாயிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி கரியகோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post வாழப்பாடி அருகே மழை காரணமாக: வீடு இடிந்து சிறுவன் பலி appeared first on Dinakaran.

Related Stories: