ஈராக்கின் கர்பலா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு..!!

ஈராக்கின் மத்திய பகுதியில் உள்ள கர்பலா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இங்குள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் வழிபாட்டு தலத்தில் வழக்கம் போல் ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, அந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வழிபாட்டு தலத்தின் மேற்கூரை மீது மண் சரிந்து விழுந்தது. மேலும் வழிபாட்டு தலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 5 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று சிறுவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

The post ஈராக்கின் கர்பலா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: