பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயலுக்கு 6 பேர் உயிரிழந்தனர். புயல், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணி முடிக்கிவிடப்பட்டு ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் நோரு என்ற புயல் நேற்று தாக்கியது. அங்குள்ள அரோரா, நியூவா எசிஜா ஆகிய இரு மாகாணங்களையும் நோரு புயல் பந்தாடியது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன.
The post பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்.. 52 ஆயிரம் பேர் பாதிப்பு..!! appeared first on Dinakaran.