அமைச்சர்கள் அவையில் இருக்கவேண்டும் சபாநாயகர் காகேரி எச்சரிக்கை

பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ சங்கமேஸ்வர் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டது. சபாநாயகர் காகேரி அதற்கு அனுமதி அளித்த நிலையில் காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவை பிற்பகல் 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. மறுபடியும் பிற்பகலில் அவை கூடியபோது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெட்ரோல்,டீசல் விலை உயர்வு குறித்து பேசத்தொடங்கினார். அப்போது அவையில் அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் இல்லை என்பதால் மாஜி அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, பிரியங்க்கார்கே உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சபாநாயகர் காகேரி, அமைச்சர்கள் அனைவரும் அவையில் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது போல் அதிகாரிகளும் பங்கேற்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதை தவறாமல் கடைபிடிக்கவேண்டும், என்றார்….

The post அமைச்சர்கள் அவையில் இருக்கவேண்டும் சபாநாயகர் காகேரி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: