வேடசந்தூர்-வடமதுரை சாலையில் நல்லா இருந்ததை குதறி பல்லாங்குழியாக்கிட்டாங்க: சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே பாலம் அமைக்க ஜேசிபி இயந்திரம் கொண்டு நன்றாக இருந்த சாலையை குதறியதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.வேடசந்தூர்-வடமதுரை சாலையில் பாலம் அமைக்க ஜேசிபி இயந்திரம் கொண்டு சாலையை குதறியதால், அந்த பகுதி முழுவதும் பல்லாங்குழி ரோடானது.  அந்த இடத்தில் பாலம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆனநிலையில், இன்னும் அந்த சாலையை முழுமையாக சரிசெய்யாமல் உள்ளனர். இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பலமுறை ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பாலப்பணிகள் முடிவடைந்து பல மாதங்களாகிறது. ஆனால், தற்போது வரை ஜேசிபியால் குதறப்பட்ட சாலையை சரி செய்யவில்லை. இதேபோன்று வேடசந்தூர்-வடமதுரை சாலையில் 10 மேற்பட்ட இடங்களில் பல்லாங்குழி ரோடாக உள்ளது. இதனை விரைவில் சரி செய்ய வேண்டும், என்றனர்….

The post வேடசந்தூர்-வடமதுரை சாலையில் நல்லா இருந்ததை குதறி பல்லாங்குழியாக்கிட்டாங்க: சீரமைக்க மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: