கயாடு லோஹர் படக் குழுவினருக்கு அபராதம்

கொச்சி: மலையாளத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிக்​கும் படம், ‘பள்ளிச்சட்டம்​பி’. டிஜோ ஜோஸ் ஆண்​டனி இயக்​கி​யுள்ள இப்படத்தின் கதை, கடந்த 1950 மற்றும் 1960களில் நடப்​பது போல் அமைந்துள்​ளது. வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் சார்​பில் நவுஃபல், பிரிஜீஷ், சிக்யூப் ப்ரோஸ் எண்​டர்​டெ​யின்​மெண்ட்ஸ் சார்​பில் சாணக்​யா சைதன்யா சரண் தயாரிக்​கின்​றனர். மாறுபட்ட கெட்டப்பில் டொவினோ தாமஸ் நடிக்​கிறார். முதலில் நேரடியாக மலை​யாளத்​தில் உரு​வாகும் இப்​படம் பிறகு தமிழ், தெலுங்​கு, இந்​தி, கன்​னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகிறது. வரும் ஏப்ரல் 9ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

இந்​நிலை​யில், இப்படத்தின் படப்​பிடிப்பு கேரள மாநிலம் இடுக்​கி​ பகுதியிலுள்ள மலங்கரா நீர்த்​தேக்​கம் அருகே நடந்​தது. படப்​பிடிப்பு முடிந்ததும் செட்டுகள் அமைக்​க பயன்​படுத்​தப்​பட்ட பொருட்களை அங்​கேயே விட்டுவிட்டு படக்​குழு​வினர் சென்றுவிட்​டனர். இதுகுறித்து ஒரு புகார் அளிக்கப்பட்டது. உடனே விசாரித்த இடுக்கி குடா​யத்​தூர் பஞ்​சா​யத்து, ‘பள்​ளிச்​சட்​டம்​பி’ படக்​குழு​வினருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்​தது. இதையடுத்து ஜேசிபி மூலம் அங்கிருந்த குப்​பைகளை படக்​குழு​வினர்​ அப்புறப்படுத்தினர்.

Related Stories: